Tuesday, August 14, 2012

Dhaanush's New Single on the Tata Nano

Thursday, April 21, 2011

My Chennal

Saturday, April 9, 2011

Wednesday, September 15, 2010

கவிதை

காதலிக்கும்போது
கவிதைதான் கிடைத்தது
காதலிக்கப்படும்போதுதான்
வாழ்க்கை கிடைக்கிறது

உன்னை என் வாழ்க்கைத்துணை என்று
எப்படிச் சொல்வது
எனக்கு வாழ்க்கை
கொடுத்துக்கொண்டிருப்பதே
நீதானே !!!

சில நேரங்களில் அவள் உள்ளங்கையில்
உயிர் வாழ்கிறாய்.
சில நேரம் அவள் கன்னத்தை வருடுகிறாய்.
அப்புறம்அவள் உதட்டையே ஒத்திப் பார்க்கிறாய்.
கடைசியில்அவள்
இடையில் ஊஞ்சலாடிஓய்வெடுக்கிறாய்
கைகுட்டையே...
நீ குட்டியூண்டு துணி என்றாலும்
கொடுத்து வைத்த துணி.


யாருமில்லா இருட்டறையில்
தனியாய் அமர்ந்திருந்தேன்
கையில் விளக்கோடு வருகிறாய் நீ...
நீ வந்தாலே ஒளிவருமே
விளக்கெதற்கு என்றேன் நான்..
வெட்கத்தில் விளக்கினும் சிவந்து
அருகில் வைத்துவிட்டு
ஓடிவிடுகிறாய் நீ.
உன்னிலிருந்தே ஒளிபெற்று
பிரதிபலித்ததாய் சொல்லி
அணைகிறது விளக்கு...

தேவதை

தேவதை எப்படி இருக்கும்
என கேட்கும் உன் தம்பியிடம்
ரொம்ப அழகாயிருக்கும் என
சொல்லி முடிக்கிறாய் நீ.
உன்னைவிட அழகாய் இருக்க
முடியாதென்று சொல்லாமல்
தவிக்கிறேன் நான்...

தேவதைகளுக்கு சிறகுகள்
இருக்கும் என்று எங்கோ
படித்திருக்கிறேன்..
பொய் சொல்வோர் நிறைய
இருந்திருக்கிறார்கள் போலும்
நீ இங்கே சிறகில்லாமல்
இருப்பதை யாரும்
பார்க்கவில்லையோ

வானத்திலிருந்து
தான் தேவதைகள்
வருமாமே..நீ மட்டும்
எப்படி
எதிர்வீட்டிலிருந்து
வருகிறாய்...

தேவதைகள்
எப்போதுமே புன்னகையோடு
தான் இருக்குமாம்.
நீ மட்டும் காதல் சொன்னால்
ஏன் கோபப்படுகிறாய்.

தேவதைகள் எல்லாம்
காரணமின்றி யாரையும்
துன்புறுத்தாதாம்..
நீ மட்டும்
என்ன என்னை இல்லாமலே
ஆக்கிவிட்டாய்

தாவணி

தாவணிகட்டியதால்
அழகாய் இருப்பதாய்
சொல்கிறாய் நீ..
உன்னை கட்டியதால்
அழகாய் இருப்பதாய்
சொல்லி பறக்கிறது
தாவணி..

ஒரு மணிநேரமாய்
அலசுகிறாய்
ஜவுளிக்கடையில்
உனக்கான தாவணிக்கு.
உன் கை படும் தாவணிக்கெல்லாம்
தாங்கமுடியா சந்தோசம்
அதிஅழகியை தொட்டுவிட்டோமென

உன்னால் நிராகரிக்கபட்ட
தாவணிகளெல்லாம்
உயிர்நீக்கின்றனவாம்
தன் சாயம் வெளுத்து
உனக்கானவையாய்
உருவாக்கபடாததினால்

தாவணிகட்டினால்
கொள்ளையழகாய் இருக்கிறாய்
நீஎன்று உன் முந்தானை இழுத்தேன் நான்
இவளிடம் இருந்து
என்னை பிரிக்காதே என
காற்றோடு சேர்ந்து
என்னை அடிக்கிறது தாவணி